Homeசெய்திகள்சினிமாபாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு

பாடகி பவதாரிணி மறைவால் கதறிய நடிகர் வடிவேலு

-

- Advertisement -
இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 1984-ம் ஆண்டு பிறந்தவர் மகள் பவதாரிணி. அவருக்கு வயது 47 ஆகும். மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரியான அவர், ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி இருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாடகியாகவும் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். மேலும், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பெற இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இலங்கை சென்றுள்ளனர். நாளை மாலை பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மாரிசன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் இளையராஜாவின் தங்க மகள் பவதாரிணியின் மறைவு செய்தி கேட்டதும் எதுவுமே புரியவில்லை. என்ன ஆச்சு, 47 வயது பெண், இவ்வளவு விரைவில் கடவுளிடம் சென்றதை நினைத்து கதறி அழுதேன் என தெரிவித்தார்

மேலும், பவதாரிணி ஒரு சாதாரண குழந்தை அல்ல, அது தெய்வ குழந்தை. அந்த குழந்தையோட குரல் குயில்போல இருக்கும். அவருடைய மறைவுச் செய்தி கேட்டு தமிழக மக்கள் அனைவரும் நொருங்கி இருப்பார்கள். தைப்பூச நாளில் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அவர் முருகனிடம் ஐக்கியம் ஆகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வடிவேலு தெரிவித்திருந்தார்.

MUST READ