நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா மிரட்டி இருந்தார். டைம் டிராவல் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து விஷால் தனது 34 வது படமான ரத்னம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று இந்த அறிவிப்பு வெளியான நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.