பிரபல நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
நடிகை சமந்தா, கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, அஞ்சான், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தனது ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி பிஸியாக நடித்து வந்த சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் நோய் ஏற்பட்டது. பின்னர் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இப்போது மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளார். அதன்படி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சியையும் செய்து மேலும் தன்னை மெருகேற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று, நடிகை சமந்தா திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். இவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அதை தொடர்ந்து தீர்த்த பிரசாதம், லட்டு, சாமி படம் போன்றவற்றையும் வழங்கி சிறப்பித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தரிசனம் செய்து வெளியே வந்த நடிகை சமந்தாவுடன், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக் கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.