சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க, இவர்களுடன் இணைந்து வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான பரிமாணத்தில் நடிக்கிறார். எனவே இந்த படமானது ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் முழுக்க முழுக்க கமர்சியல் படமாக உருவாகி வருகிறது எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்தது ஏ.ஆர். முருகதாஸ் சிக்கந்தர் படத்தில் பிஸியானதால், மதராஸி படப்பிடிப்பிற்கு பிரேக் விடப்பட்டது. தற்போதைய ஏ.ஆர். முருகதாஸ், சிக்கந்தர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மதராஸி படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.
அந்த வகையில் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பு மொத்தமாக 25 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் அதில் 15 நாட்களில் சிவகார்த்திகேயனின் போர்ஷன் முடிந்து விடும் எனவும் லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. எனவே மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை விரைவில் முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு தயாராகலாம் என்று சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மதராஸி திரைப்படம் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.