நடிகர் அர்ஜுன் தாஸ், ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசி உள்ளார்.நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 12) திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இவர், ‘ஒன்ஸ் மோர்’ எனும் படத்திலும் நடித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி, இயக்க மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஹேசம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ஒன்ஸ் மோர் திரைப்படம் சுத்தமான காதல் கதை. நான் ஒரு காதல் கதை பண்ணும் போது அதில் நச்சுத்தன்மை உள்ள காதல் இருக்காது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையான காதல் கதையும் எனக்கு வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒன்ஸ் மோர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
- Advertisement -