நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் தற்போது சிறந்த இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி கண்டது. மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார் தனுஷ். அடுத்ததாக தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், அசோக்செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவலாக படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளாராம்.
அதாவது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷாலினி பாண்டே இந்த படத்தில் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -