நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 34 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தினை டாடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கணேஷ் கே பாபு இயக்க உள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதாவது இந்த படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தெளதி ஜிவால் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளார் என்றும் புதிய அப்டேட் வெளி வந்துள்ளது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -