சியான் 62 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீண்ட காலமாக தன் உடலை வருத்தி தமிழ் சினிமாவுக்காக அர்ப்பணித்து சிறந்த நடிப்பை கொடுப்பவர் சியான் விக்ரம். பொன்னியின் செல்வன் படங்களைத் தவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் இப்படங்களுக்காக அவருடைய உழைப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்ததாக 2024 கோடை ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. சியான் விக்ரமுக்கு இப்படம் நிச்சயமாக ஒரு கம்பேக் திரைப்படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில் விக்ரம் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. வித்தியாசமான கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாக இருப்பது போல அந்த டீசரில் தெரிகிறது.மேலும் இப்படத்தில் விக்ரம் மட்டுமின்றி எஸ் ஜே சூர்யா மற்றும் மலையாள ஸ்டாரான சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரும் நடிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று ஸ்டார்களும் நடிப்பில் அசர வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். குறிப்பாக சுராஜ் வெஞ்சரமூடு மலையாள சினிமாக்களில் நடிப்புக்கு பெயர் போனவர் என்றாலும் தமிழில் முதல் முறையாக சியான் 62 படத்தில் நடிக்க உள்ளார். இவருடைய கதாபாத்திரம் வில்லனாக இருக்குமா? அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பது பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘ சியான் 62’ படத்தை S.U. அருண்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
Yes, we have been seeing your inquiries on #CHIYAAN62 updates
We’re not gonna keep you waiting too long
Our team under director #SUArunkumar is working all around to START SHOOTING from APRIL 2024
And of course, our @chiyaan sir is fully ready to stun you allKeep guessing !!
— HR Pictures (@hr_pictures) March 22, 2024
சியான் 62 படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.