நடிகை அபர்ணா தாஸுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் ஞான் பிரகாசன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர். அதைத்தொடர்ந்து மனோகரம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் இவர் தமிழில் நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். டாடா திரைப்படம் அபர்ணா தாஸுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் பிரபல மலையாள நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அதாவது தீபக் பரம்பொல், அபர்ணாதாஸ் இருவரும் இணைந்து 2019ல் வெளியான மனோகரம் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரின் திருமணமும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கேரளாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தீபக் பரம்பொல் என்பவர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.