நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் ஆவார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் குபேரா போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியும் வருகிறார். அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
அதாவது நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் கடந்த 2022-ல் தங்களின் திருமண உறவே முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தனர். கடந்த சில வருடங்களாகவே தனித்தனியாக வாழ்ந்து வரும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பர விவாகரத்து பெறுவதற்கான குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து இருவரையும் 2024 அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனராம். அதன்படி தனுஷின் சொந்தத்தில் மணப்பெண்ணை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் திரை துறையைச் சார்ந்தவர்கள் என்பதாலும் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்க கூடும் என்பதன் காரணமாக திரைத்துறையை சாராத மணப்பெண்ணை தனுஷுக்கு மணமுடித்து வைக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே விவாகரத்து பெற்ற பின் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும் என்று பல தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் தனுஷ் தரப்பில் இது தொடர்பாக எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.