நடிகர் தனுஷ், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் உருவெடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தனது ஐம்பதாவது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்துள்ளார். தனுஷின் D50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மாஸான கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராயன் படத்திற்கு கதை எழுதியது செல்வனராகவன் தான் என்று பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது குறித்து நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Friends , heard reports that I have written the script for D 50 RAAYAN. I clarify that I have NOTHING to do with ‘ RAAYAN ‘ s script or scripting process. It’s purely @dhanushkraja s dream script and now he has made it in to his own film. I am merely an actor in this project 🙏🏼
— selvaraghavan (@selvaraghavan) February 20, 2024
அந்த பதிவில், “நண்பர்களே D50- ராயன் படத்திற்கு நான் தான் கதை எழுதினேன் என்ற செய்திகள் வெளியானதை கேள்விப்பட்டேன். எனக்கும் ராயன் படத்தின் ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்ட் செயல்முறைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். இது முற்றிலும் தனுஷின் கனவுக்கதை. அதை தனது சொந்த படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.