Homeசெய்திகள்சினிமாபேச வேண்டிய அரசியலை பேசியுள்ளேன்... இயக்குநர் வசந்தபாலன் பேட்டி...

பேச வேண்டிய அரசியலை பேசியுள்ளேன்… இயக்குநர் வசந்தபாலன் பேட்டி…

-

- Advertisement -
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்த பாலன், வெயில் படத்திற்காக தேசிய விருதை வென்றார். நீண்ட இடைவௌிக்கு பிறகு அண்மையில் வசந்த பாலன் படம் இயக்கினார். அநீதி என்ற அத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது இணைய தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். தலைமைச் செயலகம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், ஸ்ரேஷா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த இணைய தொடர் உருவாகி உள்ளது.

இத்தொடர் குறித்து பேசிய இயக்குநர் வசந்த பாலன், எதைச் சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்று கவனத்துடன் இந்த தொடரை இயக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழில் கூர்மையான அரசியலை பேசும்படம் இதுவரை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ