- Advertisement -
கிரிக்கெட் விளையாட்டின்போது, அல்லு அர்ஜூன் ரசிகர்களும், பிரபாஸ் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோலிவுட்டில் இரு பெரும் நட்சத்திரங்கள் அல்லு அர்ஜூன் மற்றும் பிரபாஸ். இருவருமே தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருகின்றனர். டோலிவுட் எனும் தெலுங்கு திரை உலகில் குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த பிரபாஸை ஒரு பான் இந்தியா நடிகராக உயர்த்தியது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் வெற்றி பிரபாஸின் இமேஜை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது. பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைபெற்றன. இதையடுத்து, இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார்.
அதேபோல, பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்த வந்த அல்லு அர்ஜூனை, வைகுந்தபுரமுலோ திரைப்படம் உச்ச நடிகராக மாற்றியது. இதைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் புஷ்பா. இப்படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் மாபெரும் ஹிட் அடித்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Allu Arjun Fans Vs Prabhas Fan 🤺#Tollywood
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 11, 2024