Homeசெய்திகள்சினிமாமக்கள் பிரச்சினையைப் பேசினா அது நல்ல படம் -இயக்குநர் பேரரசு

மக்கள் பிரச்சினையைப் பேசினா அது நல்ல படம் -இயக்குநர் பேரரசு

-

- Advertisement -
மக்கள் பிரச்சனையை பேசும் திரைப்படங்களே நல்ல திரைப்படங்கள் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாக பாய் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்திருக்கிறார். நாயகியா நிகிஷா, வில்லனாக தீரஜ் கெர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். மக்கள் இன்று அனைத்து பிரச்சனைகளையும் வெறும் செய்தியாக கடந்து போகின்றனர். அதற்கு தீர்வு என பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்களும் யோசிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா? வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சனையை பேசுகிறதோ அதுவே நல்ல திரைப்படம். அப்படி பார்க்கும்போது பாய் மிகச்சிறந்த திரைப்படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கின்றனர், கொண்டாடுகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.

90-களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, அஜித்தை வைத்து திருப்பதி, பரத்துடன் திருத்தணி, பழனி என பல திரைப்படங்களை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் பேரரசு.

MUST READ