Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு தள்ளிப்போகும் 'கேம் சேஞ்சர்'.... அப்செட்டில் ரசிகர்கள்!

பொங்கலுக்கு தள்ளிப்போகும் ‘கேம் சேஞ்சர்’…. அப்செட்டில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பொங்கலுக்கு தள்ளிப்போகும் 'கேம் சேஞ்சர்'.... அப்செட்டில் ரசிகர்கள்!

ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு தள்ளிப்போகும் 'கேம் சேஞ்சர்'.... அப்செட்டில் ரசிகர்கள்!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ஜரகண்டி எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து ரா மச்சா மச்சா பாடலும் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக புதிய தகவல் வெளிவந்துள்ளன. அதாவது ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் கேம் சேஞ்சர் திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அப்டேட் கொடுத்திருந்தது. பொங்கலுக்கு தள்ளிப்போகும் 'கேம் சேஞ்சர்'.... அப்செட்டில் ரசிகர்கள்!அதன்படி இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

MUST READ