spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியான 'கோட்' .... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

ஓடிடியில் வெளியான ‘கோட்’ …. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி இருந்தால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு கொண்டுவரப்பட்டது.ஓடிடியில் வெளியான 'கோட்' .... ஏமாற்றத்தில் ரசிகர்கள்! இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஓடிடியில் வெளியான 'கோட்' .... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!அந்த வகையில் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படத்தின் டைரக்டர் கட் 3.30 மணி நேரங்களுக்கும் அதிகமாக இருக்கும் எனவும் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் நீட்டிக்கப்பட்ட பதிப்பில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கோட் படத்தின் ஓடிடி வருகைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். ஓடிடியில் வெளியான 'கோட்' .... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!ஆனால் இந்த படம் தற்போது ஓடிடியில் தியேட்டர் பதிப்பில் மட்டுமே வெளியாகி இருப்பதால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இது தொடர்பாக வெங்கட் பிரபு, டைரக்டர் கட்-க்கான விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் தயாரிப்பாளர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார். ஆகையினால் இது நீக்கப்பட்ட காட்சிகளாகவோ அல்லது நீட்டிக்கப்பட்ட பதிப்பிலோ வெளியிட இருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

MUST READ