நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஆர்கே கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும் பாட புத்தகங்களை தவிர அம்பேத்கர் பெரியார் காமராஜர் போன்ற பல தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுமாறும், நற்குணங்கள் மற்றும் சிந்தனை திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன் பின் விஜய், 1500 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்று, கல்வி விருது, ஊக்கத்தொகை போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 421 மதிப்பெண்கள் பெற்ற திருத்தி வருமா எனும் மாற்றுத்திறனாளி மாணவன் தான் வரைந்த விஜயின் ஓவியத்தை விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினான்.