spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது'....... நடிகை வாணி போஜன் பேட்டி!

‘எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது’……. நடிகை வாணி போஜன் பேட்டி!

-

- Advertisement -

அரசியலுக்கு வர ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் பேட்டியளித்துள்ளார்.

'எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது'....... நடிகை வாணி போஜன் பேட்டி!நடிகை வாணி போஜன், சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி லாக்கப், ஓ மை கடவுளே, மிரள், மலேசியா டு அம்னீசியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் செங்களம் என்ற வெப்தொடரில் நடித்திருக்கிறார் வாணி போஜன். இந்த வெப் தொடர் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.'எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது'....... நடிகை வாணி போஜன் பேட்டி!

we-r-hiring

இந்நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய வாணி போஜனிடம் அரசியல் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வாணி போஜன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். செங்களம் வெப் தொடரில் நடித்த போது எனக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போதும் அந்த ஆசை இருக்கிறது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “விஜய்க்கும் நாம் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவரும் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ