நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் வெள்ளி திரைக்கு சென்ற இவர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வாணி போஜனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் அள்ளித் தந்தது. அதன் பிறகு லாக்கப், மிரள், ட்ரிபிள்ஸ், மலேசியா டு ஆம்னிசியா போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேசமயம் செங்கலம் போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ள வாணி போஜன் அடுத்ததாக சட்னி சாம்பார் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசிய வாணி போஜன், ” அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பெரிய நடிகையாக வர வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. ரசிகர்களின் பாராட்டு மட்டுமே போதும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம் என்று கூறினார். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -