Homeசெய்திகள்சினிமாசிம்பொனி மூலமாக இளையராஜாவிற்கு கிடைக்கும் உயரிய விருது!

சிம்பொனி மூலமாக இளையராஜாவிற்கு கிடைக்கும் உயரிய விருது!

-

- Advertisement -

சிம்பொனி மூலமாக இளையராஜாவிற்கு உயரிய விருது கிடைக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சிம்பொனி மூலமாக இளையராஜாவிற்கு கிடைக்கும் உயரிய விருது!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதற்குப் பிறகு எத்தனை இசையமைப்பாளர்கள் திரைத்துறையில் நுழைந்தாலும் 82 வயதிலும் தனது இசையினாலும், குரலினாலும் மனதை வருடும் பாடல்களை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்து சினிமாவில் பல ஆண்டுகளாக கோலாட்சி செய்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்து சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா, லண்டனில் வேலியண்ட் என்ற பெயரில் சிம்போனி இசையை அரங்கேற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதற்காக திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சிம்பொனி மூலமாக இளையராஜாவிற்கு கிடைக்கும் உயரிய விருது!இந்த தகவல் இளையராஜாவின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இளையராஜாவின் மகத்தான சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக விழா ஏதேனும் நடத்தப்பட இருக்கிறதா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ