கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி, ‘மெய்யழகன்’ படத்திற்கு பிறகு ‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர இன்னும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கார்த்தி. இதற்கிடையில் தான் இவர் ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மார்ஷல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடல் சம்பந்தமான கதைக்களத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராக இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் கார்த்தியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிகர் ஜீவா இப்படத்தில் வில்லனாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ‘மிருகம்’, ‘ஈரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஆதி, ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -