நாயகன் படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் காரணமாக அரசியலில் பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான் இதிலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. தற்போது இதன் புதிய அப்டேட் என்னவென்றால் துல்கர் சல்மானை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் தக் லைஃப் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என அடுத்தடுத்த மாதங்களில் ஜெயம் ரவியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே ஜெயம் ரவி தான் நடித்துவரும் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் தக் லைஃப் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.