![](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/05/kamal4343-1.jpg)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமாவின் ஐகான், சினிமாவில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் கலை விஞ்ஞானி அவர் தான் நடிகர் கமல்ஹாசன்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை
சினிமாவில் ஒரு கலைஞனுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் வெற்றி, அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்று விடும் என்பார்கள். அப்படி ஒரு தருணத்தில் விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் சினிமாவில் அடுத்த உச்சத்தைத் தொட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
சினிமாவைக் கலை ரீதியாக அணுகுவதிலும் காலத்தால் அழியாதப் படைப்புகளைக் கொடுப்பதிலும் கமல்ஹாசனுக்கு நிகர் கமல்ஹாசன் மட்டுமே. ஆனால் அந்த படங்களின் வசூல் என்பது மற்ற பெரும் ஹீரோக்களின் வசூலை ஒப்பிடும் போது, குறைவாக இருக்கும் என்ற கருத்து சினிமாவில் உள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம், கமல்ஹாசனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்த படைப்பாக அமைந்தது. அதன் பிறகு தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசன், அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்மென்ட் கொடுத்திருக்கிறார்.
இந்தியன்- 2 படத்திற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கமலின் அடுத்த அப்டேட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில், கமல்ஹாசன் நடிப்பது உறுதியானது.
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லன் கதாபாத்திரம் என்றும், வில்லனாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 234 படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.