- Advertisement -
25 தன்னார்வலர்களை தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் கார்த்தி.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, கைதி, தம்பி, சுல்தான் உள்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜப்பான். இத்திரைப்படம் கார்த்தியின் 25-வது படமாகும்.


இத்திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பாகவே, தனது 25 வது படத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக நடிகர் கார்த்தி அறிவித்திருந்தார். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு அவர் உதவித்தொகை வழங்கி உள்ளார்.



