spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபத்துல அஞ்சு கதை சூரிக்கு தான் வருது ..... 'மாமன்' பட விழாவில் லோகேஷ் கனகராஜ்!

பத்துல அஞ்சு கதை சூரிக்கு தான் வருது ….. ‘மாமன்’ பட விழாவில் லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூரி குறித்து பேசி உள்ளார்.பத்துல அஞ்சு கதை சூரிக்கு தான் வருது ..... 'மாமன்' பட விழாவில் லோகேஷ் கனகராஜ்!சூரி நடிப்பில் தற்போது மாமன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசை அமைத்திருக்கிறார். குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ் கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பத்துல அஞ்சு கதை சூரிக்கு தான் வருது ..... 'மாமன்' பட விழாவில் லோகேஷ் கனகராஜ்!இந்த படமானது வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (மே 6) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், சூரி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுறாங்க. அதுபோல் மற்றவர்களிடமிருந்து எந்த வெறுப்பும் இல்லாமல் அவர் வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன். பத்துல அஞ்சு கதை சூரிக்கு தான் வருது ..... 'மாமன்' பட விழாவில் லோகேஷ் கனகராஜ்!சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சிறிய சிறிய படங்களை பண்ண வேண்டும் என்று இருக்கிறேன். அதில் பத்து கதை வந்தது என்றால் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதிட்டு வராங்க. சூரி அண்ணனின் இந்த வளர்ச்சிதான் பயங்கரமா இருக்கு. அவர் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ