Homeசெய்திகள்சினிமாரூ.100 கோடி கிளப்பில் நுழைந்தது நெரு... மோகன்லால் உற்சாகம்....

ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்தது நெரு… மோகன்லால் உற்சாகம்….

-

- Advertisement -
மலையாள திரையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருபவர் மோகன்லால் மற்றும் மம்முட்டி. ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகின்றனர். அது மட்டுமன்றி இயக்குநர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாடுடன் பணியாற்றுவதில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவரும் சிறந்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த படங்களை மலையாளத்தில் மட்டுமன்றி மற்ற மொழிகளிலும் வாங்கி வௌியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1980-ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்குபவர் மோகன்லால். ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் த்ரிஷ்யம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்ட அந்தந்த மொழிகளிலும் படம் வசூல் வேட்டை நடத்தியது. தமிழில் கமல் நடித்த பாபநாசம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல, 2021-ல் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது.

ஜீது ஜோசப் இயக்கத்தில் அவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் நெரு. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் சுமார் 500 திரையரங்குகளில், உலகம் முழுவதும் 400 அரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்களை நெருங்கிய நிலையில், சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதையடுத்து, வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ள மோகன்லால், திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

MUST READ