இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.
ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் எதிரணி தாக்குதல் நடத்தியதில் வீர மரணம் அடைந்தார். தற்போது இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது குறித்து முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி, “அவர் இறந்து பத்து வருடங்கள் ஆகிறது. அவருடைய தேசபக்தியை நிரந்தரமாக்கும் நேரம் இது. அமரன் அழிவில்லாதவன். இந்த படத்தை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார்.
சமீபத்தில் அமரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டீசருடன் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.