மர்மர் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
சமீப காலமாக பேய் படங்கள் என்றாலே கமர்சியல் படங்கள் ஆகிவிட்டது. ஒரு சில படங்கள் மட்டுமே தரமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. இந்நிலையில் தான் வித்தியாசமான கான்செப்டில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மர்மர்.
ஹேமந்த் நாராயணன் எழுதி, இயக்கி இருந்த மர்மர் படம் தமிழ் சினிமாவின் முதல் பவுண்டு புட்டேஜ் திரைப்படமாக உருவாகியிருந்தது. அதன்படி இந்த படம் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வந்தது. அதாவது கிராம மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து யூடியூபர்கள், பார்வையாளர்களுக்கு காட்டுவது போன்று மேக்கிங் செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் திரைக்கதை, நடிப்பு, வசனம் ஆகியவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படத்தை அருமையாக எடுத்திருந்தனர். அந்த வகையில் இந்த படம் ஹாரர் திரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் இன்று (ஏப்ரல் 4) இந்த படம் அமேசான் பிரைம் மற்றும் டென்ட் கொட்டா ஆகிய தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எஸ்பிகே பிக்சர்ஸ் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த நிலையில் கேவ்யின் பிரெடரிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்பதும் ஒரிஜினல் சவுண்ட் களை பயன்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..