spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇளையராஜா மகள் மறைவுக்கு இசையமைப்பாளர்கள் இரங்கல்

இளையராஜா மகள் மறைவுக்கு இசையமைப்பாளர்கள் இரங்கல்

-

- Advertisement -
காற்றில் கலந்த குயிலோசை..... இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணியின் நினைவலைகள்!
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளரும், பாடகருமானவர் பவதாரிணி. திரைத்துறையில் இவர் 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ச்சியும், சோகமும் நிறைந்துள்ளது. பவதாரிணியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இதயப்பூர்வமாக இரங்கல் என்று இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அதேபோல, தமனும் பதிவிட்டுள்ளார். இது அதிர்த்தி அளிக்கிறது. இளையராஜா சார் குடும்பத்திற்கு வலிமை கிடைக்கட்டும், அன்பான பவதாரிணி சீக்கிரம் மறைந்து விட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது என பதிவிட்டார்.

அதேபோல பாடகரும், இசை அமைப்பாளருமான இமானும், பவதாரிணியின் திடீர் மறைவு பற்றி கேட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக பதிவிட்டார். மேலும், அவரது ஆன்மை அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கள் என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரனும் இளையராஜா குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

MUST READ