- Advertisement -
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளரும், பாடகருமானவர் பவதாரிணி. திரைத்துறையில் இவர் 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
This is Shocking…..
strength to @ilaiyaraaja sir’s family ..Gone too soon dear #bhavatharini 🥺
Heart is heavy 💔May her soul Rest in Peace pic.twitter.com/r5HdKyWSwP
— thaman S (@MusicThaman) January 25, 2024
அதிர்ச்சியும், சோகமும் நிறைந்துள்ளது. பவதாரிணியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இதயப்பூர்வமாக இரங்கல் என்று இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அதேபோல, தமனும் பதிவிட்டுள்ளார். இது அதிர்த்தி அளிக்கிறது. இளையராஜா சார் குடும்பத்திற்கு வலிமை கிடைக்கட்டும், அன்பான பவதாரிணி சீக்கிரம் மறைந்து விட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது என பதிவிட்டார்.
Shocked and saddened #RIPBhavatharini 🙏🏻 Heartfelt condolences to the family and friends..
— Anirudh Ravichander (@anirudhofficial) January 26, 2024