Homeசெய்திகள்சினிமாகுழந்தைகளுடன் துபாய் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி

குழந்தைகளுடன் துபாய் பறந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி

-

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரு குழந்தைகளுடனும் துபாய் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன

கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

இது தவிர இந்த நட்சத்திர தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த கூலாங்கள் திரைப்படம் அண்மையில் வெளியானது. ஆனால், வெளியீட்டிற்கு முன்பாகவே இத்திரைப்படம் பல சர்வதேச விருது விழாவில் தேர்வாகி பல விருதுகளை வென்றுள்ளது. இதுமட்டுமன்றி, லிப் பாம் கம்பெனி, டிவைன் புட்ஸ், நயன் ஸ்கின் என பல தொழில் நிறுவனங்களையும் தொடங்கி இருக்கின்றனர்.

அண்மைக் காலமாக நடிப்பு, தொழில் மட்டுமன்றி குடும்பத்தினருடனும் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். அடிக்கடி குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களின் இரு மகன்களுடனும் துபாய் சென்றிருக்கின்றனர். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ