பராசக்தி படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அதன்படி மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் சிவகார்த்திகேயன், மதராஸி திரைப்படத்தில் கவனம் செலுத்தினார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சிவகார்த்திகேயன், அடுத்தது பராசக்தி படப்பிடிப்பில் இணைய உள்ளார். எனவே பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் விரைவில் பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.