spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'கங்குவா' படம் குறித்து மக்கள் கருத்து!

சூர்யாவின் ‘கங்குவா’ படம் குறித்து மக்கள் கருத்து!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 'கங்குவா' படம் குறித்து மக்கள் கருத்து!மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எனவே மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி கங்குவா திரைப்படத்தை சூர்யா தோளில் தாங்குகிறார் என்றும் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். அதிலும் சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகிய இருவருக்குமான மோதல் காட்சிகள் பட்டய கிளப்புவதாகவும் பதிவிட்டுள்ளனர். அதேசமயம் முதலையிடம் சண்டை போடும் காட்சிகள் போன்றவை செம மாஸாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அடுத்தது விஷுவல்ஸ் மிரட்டலாக இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர். சூர்யாவின் 'கங்குவா' படம் குறித்து மக்கள் கருத்து!படத்தின் கிளைமாக்ஸ் சூப்பராக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சூப்பராக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். பெரிய நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் எனவும் படத்தில் நிறைய நிறைய ட்விஸ்ட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ