spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு நாள் எனக்கு கால் பண்ணி அப்படி கேட்டாரு..... தனுஷ் குறித்து பிரியங்கா மோகன்!

ஒரு நாள் எனக்கு கால் பண்ணி அப்படி கேட்டாரு….. தனுஷ் குறித்து பிரியங்கா மோகன்!

-

- Advertisement -

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஒரு நாள் எனக்கு கால் பண்ணி அப்படி கேட்டாரு..... தனுஷ் குறித்து பிரியங்கா மோகன்!அடுத்தது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் நாளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த கோல்டன் ஸ்பேரோ எனும் பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதாவது பிரியங்கா மோகனிடம், கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகவும் ட்ரண்டாகி வருகிறது. தனுஷ் சார் எப்போது உங்களை அழைத்தார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாள் எனக்கு கால் பண்ணி அப்படி கேட்டாரு..... தனுஷ் குறித்து பிரியங்கா மோகன்!அதற்கு பதில் அளித்த பிரியங்கா மோகன், “முதலில் எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருநாள் தனுஷ் சார் எனக்கு மெசேஜ் அனுப்பினார். உங்களுக்கு கால் பண்ணட்டுமா என்று மெசேஜ் அனுப்பினார். அதன் பிறகு நான் சரி என்று சொன்னதும் கால் பண்ணி ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் கேமியா ரோல் பண்ண வேண்டும் எனக் கேட்டார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் சாருடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தை அவர் இயக்கப் போவது பற்றி சொல்லியிருந்தார். அதனால் எனக்கு ஞாபகம் இருந்தது. அவர் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். நான் அந்த முழு பாடலிலும் நடனமாடி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ