கங்குவா படத்தில் வால்யூமை குறைக்க சொல்லி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவின் ராஜா படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியானது. ஆனால் திரைக்கதை படத்தின் பெரிய மைனஸ் ஆக அமைந்த நிலையில் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் படத்தின் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் படத்தில் நடித்துள்ள அனைவரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள் எனவும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக வெளிவந்த விமர்சனங்களை ஏற்று திரையரங்க உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கும்படி சொல்லி இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளார்.
எனவே இனியாவது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன்படி கங்குவா படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் படத்தைப் பற்றி மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்தனர். ஆனால் படம் வெளியான பின்னர் படக்குழுவினர் பேசியவற்றை எடுத்து நெட்டிசன்கள் பலரும் ட்ரால் செய்து வருகின்றனர்.