spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி.... 'வேட்டையன்' பட அப்டேட்!

இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி…. ‘வேட்டையன்’ பட அப்டேட்!

-

- Advertisement -

ரஜினி, ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தற்போது தனது 170 வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமடைந்த டிஜே ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி.... 'வேட்டையன்' பட அப்டேட்!லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, நெல்லை, கேரளா, மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் ரஜினி, சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார் எனது தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினி.... 'வேட்டையன்' பட அப்டேட்!இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினி, ” வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். தலைவர் 171 படத்தின் வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்த படத்தினை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்ட வருவதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

 

MUST READ