Homeசெய்திகள்சினிமாகூலி படப்பிடிப்பு தள்ளிப்போனதாக தகவல்... புதிய தேதி இதுதானா?...

கூலி படப்பிடிப்பு தள்ளிப்போனதாக தகவல்… புதிய தேதி இதுதானா?…

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்கி மும்பை, புதுச்சேரி, கேரளா, நெல்லை என மாறி மாறி நடைபெற்று வந்தது. மும்பையில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து ஓய்வெடுக்க அபுதாபி மற்றும் ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த் அடுத்து கூலி படப்பிடிப்பில் பங்கேற்க இருந்தார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத காரணங்களால் கூலி படப்பிடிப்பு தள்ளிப்போனதாக தகவல் வௌியாகி உள்ளது. அதன்படி, இம்மாத இறுதிக்குள் கூலி படப்பிடிப்பு தொடங்கும் என்றும், முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினி, சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ