Homeசெய்திகள்சினிமா'கராத்தே பாபு' டீசர் ரிலீஸுக்கு பிறகு ஒரு போன் வந்தது..... உண்மையை போட்டுடைத்த ரவி மோகன்!

‘கராத்தே பாபு’ டீசர் ரிலீஸுக்கு பிறகு ஒரு போன் வந்தது….. உண்மையை போட்டுடைத்த ரவி மோகன்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரவி மோகன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. 'கராத்தே பாபு' டீசர் ரிலீஸுக்கு பிறகு ஒரு போன் வந்தது..... உண்மையை போட்டுடைத்த ரவி மோகன்!அதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரவி மோகன். இதற்கிடையில் தான் இவர், டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரவி மோகனுடன் இணைந்து தவ்தி ஜிவால், பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க சாம். சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த டீசரை பார்க்கும்போது இந்த படம் அரசியல் கதைக்களம் போல் தெரிந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட ரவி மோகன், “உங்கள் அனைவருக்கும் என்னை ஜெயம் ரவி ஆக தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது ரவி மோகன். ‘ஜெயம் ரவி எனும் பெயர் அன்பான நண்பர்களாலும் ரசிகர்களாலும் எனக்கு கிடைத்தது. ஆனால் இன்று ரவி மோகனாக நான் உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன்’ என்று நான் கராத்தே பாபு டீசரை போட்டிருந்தேன்.

அந்த டீசர் வெளியான பிறகு அமைச்சர் சேகர்பாபு எனக்கும், அந்த படத்தின் இயக்குனருக்கும் கால் பண்ணாரு. இயக்குனர் பயந்து கொண்டே போனார். ‘தம்பி நீங்க கராத்தே பாபு என்று ஒரு படம் எடுக்குறீங்க போலிருக்கே’ என்று கேட்டார். ஆமாங்க சார் என்று சொன்னோம். ‘அந்த கேரக்டர் கொஞ்சம் நம்மள மாதிரி இருக்கே’ என்று கேட்டார். அப்படியெல்லாம் இல்லைங்க சார் என்று இயக்குனர் மழுப்பினார். உடனே சேகர்பாபு ஐயா, ‘தம்பி நான் தான்பா கராத்தே பாபு என்று சொல்லிவிட்டார்’ “என்று பேசி உள்ளார் ரவி மோகன்.

MUST READ