- Advertisement -
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில், மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதம் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. த்ரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
