Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக மாறும் சாய் பல்லவி!

இயக்குனராக மாறும் சாய் பல்லவி!

-

நடிகை சாய் பல்லவி இயக்குனராக அறிமுகமாகிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். இயக்குனராக மாறும் சாய் பல்லவி!அதேசமயம் இவருடைய நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து NGK, தனுஷ் உடன் இணைந்து மாரி 2 போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் சாய்பல்லவி நடித்து வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. அதைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் தண்டேல் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக நித்திஷ் கல்யாண் இயக்க இருக்கும் ராமாயண கதையில் சீதையாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இயக்குனராக மாறும் சாய் பல்லவி! மேலும் சாய் பல்லவி இயக்கப் போகும் படத்தில் யார் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், என்பது போன்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ