தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ரமணா படதை இயக்கினார். இப்படம் கோலிவுட் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே கோலிருட்டில் முத்திரை பதித்தார் இயக்குநர் முருகதாஸ்.
இதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, தெலுங்கில் ஸ்டாலின், இந்தியில் கஜினி படங்களை இயக்கினார். இதையடுத்து, சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். இது விஜய்யின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அடுத்து இந்தியில் துப்பாக்கி படத்தின் ரீமேக்கை இயக்கினார். தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
பாலிவுட்டில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய படம் நடிக்க உள்ளார். வரும் கோடை விடுமுறையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.