Homeசெய்திகள்சினிமாபட்டையை கிளப்பிய பதான்... இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்....

பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….

-

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலை குவித்ததைத் தொடர்ந்து பதான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

பாலிவுட்டின் ஜாம்பவானாக கொண்டாடப்படும் நாயகன் ஷாருக்கான். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3 திரைப்படங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு, கடந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்தது. அந்த வகையில், ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி பதான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில், ஷாருக்கான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

MUST READ