Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கூட்டணியின் புதிய படம்..... சைலன்டாக நடந்து முடிந்த பூஜை!

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கூட்டணியின் புதிய படம்….. சைலன்டாக நடந்து முடிந்த பூஜை!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்கள் என்று சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றனர்.சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கூட்டணியின் புதிய படம்..... சைலன்டாக நடந்து முடிந்த பூஜை! அதாவது நடிகர் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி ஏற்கனவே சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் தான் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்தி திணைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதேசமயம் படம் தொடர்பாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகமாக்கி வருகின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கூட்டணியின் புதிய படம்..... சைலன்டாக நடந்து முடிந்த பூஜை!அதுவும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், SK 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்ற முடிந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ