நடிகர் சிவகார்த்திகேயன் ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ‘2018’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜூட் ஆண்டனி ஜோசப், லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. அதே சமயம் இவர் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட அதில் ஆர்யா நடிக்கப் போகிறார் என தகவல் கசிந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சிம்பு நடிக்க இருந்த அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கப் போவதாகவும் கூடுதல் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தினை எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிப் பட இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது பராசக்தி, மதராஸிஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.