சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த இவர், மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். மேலும் காக்கி சட்டை, மான் கராத்தே, ரெமோ, ஹீரோ என அடுத்தடுத்த படங்களில் ஆக்சன் அவதாரம் எடுத்து தனது கேரியரை அடுத்த கட்டத்திற்கு நகரத்தினார். அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து இமாலய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் , ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் பராசக்தி படத்திலும் நடித்து வரும் சிவகார்த்திகேயன் விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள் 🥰🥰
Happy first birthday dear Pavan kutty ❤️❤️🤗🤗 pic.twitter.com/9OMuC1JHBG
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 2, 2025

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் தனது மனைவி, குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அதாவது சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன், பவன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் எக்ஸ் தள பக்கத்தில், தனது மனைவி மற்றும்,மூன்றாவது குழந்தை பவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.