Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் பொம்மை பட ஜோடி... கில்லர் பட புதிய அப்டேட்...

மீண்டும் இணையும் பொம்மை பட ஜோடி… கில்லர் பட புதிய அப்டேட்…

-

பொம்மை படத்தில் இணைந்து நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் ‘பொம்மை‘ எனும் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராதா மோகன் இயக்கினார். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்தார். இந்தப் படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதன் பின் கடந்தாண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது.

பொம்மை படத்திற்கு பிறகு விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸூடன் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து, தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும், தனுஷ் நடிக்கும் ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது தவிர தமிழ் மட்டுமன்றிதெலுங்கு படங்களிலும் அவர் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில், எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் தான் கில்லர். இப்படம் ஒரு காரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பொம்மை படம் மட்டுமன்றி மான்ஸ்டர் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 3-வது திரைப்படம் ஆகும். விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ