நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் நடிகர் சூரி. இவர் தற்போது தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். அதைத்தொடர்ந்து இவர், கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூரி. இதற்கிடையில் ராம் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் நடிகர் சூரி, மற்றுமொரு புதிய படத்திலும் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
அதன்படி சூரியின் அடுத்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கப் போவதாகவும் இதனை ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -