spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்தமானில் சூர்யா44 படப்பிடிப்பு... பிரம்மாண்டமாக உருவாகும் அரங்கம்...

அந்தமானில் சூர்யா44 படப்பிடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் அரங்கம்…

-

- Advertisement -
நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, திஷா பதானி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் தெரிகிறது.

https://x.com/i/status/1796166771990290755

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வௌியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்தமானில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுவதற்காக முன்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையிலிருந்து கப்பல் வழியாக பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தமானில் பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை வீடியோவாக படக்குழு பகிர்ந்துள்ளது.

MUST READ