Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'புறநானூறு' பட லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யாவின் ‘புறநானூறு’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

-

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மற்றும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதா கொங்கரா, சூர்யா கூட்டணி இணைய உள்ளது. சூர்யாவின் 'புறநானூறு' பட லேட்டஸ்ட் அப்டேட்!இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தினை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். அதன்படி இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூர்யாவின் 'புறநானூறு' பட லேட்டஸ்ட் அப்டேட்! மேலும் இந்த படம் 1950 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கப்படும் என்று தகவல் கசிந்திருந்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் தற்போது இந்த படம் மார்ச் மாதத்தின் இடையில் நடைபெறும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருச்சி, சிதம்பரம், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ