சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் சூர்யாவின் 42 வது படமாகும். இதனை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து வெளியான தலைவனே பாடல் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருக்கிறது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா கங்குவா படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “கங்குவா படத்தில் நான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் கங்குவா கதாபாத்திரம் 2 மணி நேரங்கள் இடம்பெறும். மற்றொரு கதாபாத்திரமான பிரான்சிஸ் என்ற கதாபாத்திரம் ரகசிய போலீஸ் கதாபாத்திரம். இந்த கதை 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -