- Advertisement -
கேரளாவில் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் வெளியாகும் மலையாள மொழி படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதில், கேரள தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. திரைப்படம் திரையரங்கிற்கு வந்த 42 நாட்கள் கழித்து தான், ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்பது தான் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள நிபந்தனை ஆகும். இதை தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இந்த நிபந்தனை மீறி சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.
